செய்திகள்
முக ஸ்டாலின் தலைமையில் பேரணி

கருணாநிதி முதலாண்டு நினைவு தினம் - ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதி பேரணி

Published On 2019-08-07 03:12 GMT   |   Update On 2019-08-07 03:12 GMT
முன்னாள் முதலமைச்சரான கருணாநிதியின் முதலாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நினைவு பேரணி தொடங்கியது.
சென்னை:

முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கருணாநிதியின் முதலாண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தி.மு.க. சார்பில் சென்னை வாலாஜா சாலையில் இருந்து கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணி இன்று காலை தொடங்கியது.

இந்த பேரணியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் துரைமுருகன், கனிமொழி எம்.பி, ஆ.ராசா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
Tags:    

Similar News