செய்திகள்
நீலகிரியில் கனமழை - தொடர்ந்து 3வது நாளாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
நீலகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கேரள மாநிலத்தையொட்டியுள்ள எல்லையோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் குந்தா, கூடலூர் ,பந்தலூர், அப்பர்பவானி பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மேற்குறிப்பிட்ட 4 தாலுக்காக்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் இன்னசெண்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.