செய்திகள்
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.4.60 லட்சம் மோசடி
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.4.60 லட்சம் மோசடி செய்த கும்பலில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி குலசேகரபாண்டியன் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் கவுரிசங்கர் (வயது27). கல்லூரி முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறார்.
இவரிடம் பரமசிவன் கோவில் தெருவை சேர்ந்த குமார், தேவராஜ், சவுதாமணி ஆகியோர் தங்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் ஆட்களை தெரியும். அங்கு வேலை செய்ய தற்போது தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வெளிநாடு செல்ல தாங்கள் ஏற்பாடு செய்வதாக கூறி உள்ளனர்.
இதற்கு ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் செலவாகும் என தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய கவுரிசங்கர் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்துள்ளார்.
ஆனால் உறுதி அளித்தபடி வெளிநாட்டில் வேலை வாங்கி தரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த கவுரிசங்கர் அவர்களிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை தர மறுத்துள்ளனர்.
இதுகுறித்து போடி நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடி குலசேகரபாண்டியன் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் கவுரிசங்கர் (வயது27). கல்லூரி முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறார்.
இவரிடம் பரமசிவன் கோவில் தெருவை சேர்ந்த குமார், தேவராஜ், சவுதாமணி ஆகியோர் தங்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் ஆட்களை தெரியும். அங்கு வேலை செய்ய தற்போது தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வெளிநாடு செல்ல தாங்கள் ஏற்பாடு செய்வதாக கூறி உள்ளனர்.
இதற்கு ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் செலவாகும் என தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய கவுரிசங்கர் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்துள்ளார்.
ஆனால் உறுதி அளித்தபடி வெளிநாட்டில் வேலை வாங்கி தரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த கவுரிசங்கர் அவர்களிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை தர மறுத்துள்ளனர்.
இதுகுறித்து போடி நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.