செய்திகள்
காரைக்காலில் சிறுமியை காரில் கடத்தி பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது
காரைக்காலில் சிறுமியை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக போக்சோ சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் பிள்ளைதெருவாசல் பகுதியை சேர்ந்தவர் ராணி. இவரது 13 வயது மகளை கோட்டுச்சேரியை சேர்ந்த கலையமுது (வயது27) என்பவர் ஆசைவார்த்தை கூறி காரில் சென்னைக்கு கடத்தி சென்றார். அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
தனது மகள் காணாமல் போனது குறித்து ராணி காரைக்கால் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமைலை தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து சிறுமியை கடத்திய கலையமுதுவை தேடி வந்தனர்.
இதனிடையே செல்போன் மூலம் துப்பு துலக்கப்பட்டதில் சிறுமியை கலையமுது திருவள்ளூர் பட்டாபிராமன் நகரில் கடத்தி வைத்து இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கலையமுதுவை கைது செய்தனர்.
கலையமுதுவுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சுரேஷ் என்பவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
காரைக்கால் பிள்ளைதெருவாசல் பகுதியை சேர்ந்தவர் ராணி. இவரது 13 வயது மகளை கோட்டுச்சேரியை சேர்ந்த கலையமுது (வயது27) என்பவர் ஆசைவார்த்தை கூறி காரில் சென்னைக்கு கடத்தி சென்றார். அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
தனது மகள் காணாமல் போனது குறித்து ராணி காரைக்கால் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமைலை தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து சிறுமியை கடத்திய கலையமுதுவை தேடி வந்தனர்.
இதனிடையே செல்போன் மூலம் துப்பு துலக்கப்பட்டதில் சிறுமியை கலையமுது திருவள்ளூர் பட்டாபிராமன் நகரில் கடத்தி வைத்து இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கலையமுதுவை கைது செய்தனர்.
கலையமுதுவுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சுரேஷ் என்பவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து காரும் பறிமுதல் செய்யப்பட்டது.