செய்திகள்
போராட்டம்

அன்னூர் அருகே மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2019-08-03 11:20 GMT   |   Update On 2019-08-03 11:20 GMT
அன்னூர் அருகே மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

அன்னூர்:

அன்னூர் அருகே உள்ள கணேசபுரத்தில் வருகிற 5-ந் தேதி டாஸ்மாக் கடை புதியதாக திறக்கபடுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் மணிகண்டன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் அர்ஜூன் தலைமையில் பெண்கள் 40 பேர் உள்பட 75 பேர் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அன்னூர் தாசில்தார் சந்திராவிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் இதுகுறித்து கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News