செய்திகள்
9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள குளபதம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். புதுமடத்தில் உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு முருகேசன் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறினாள்.
தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து கீழக்கரை அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தாயார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை போக்சோ திட்டத்தில் கைது செய்தனர்.