செய்திகள்
பணி நியமன ஆணையை பன்வாரிலால் புரோகித் வழங்கிய போது எடுத்த படம்

லோக் ஆயுக்தா உறுப்பினர்களுக்கு பணி நியமன ஆணை - பன்வாரிலால் புரோகித் வழங்கினார்

Published On 2019-07-29 23:26 GMT   |   Update On 2019-07-29 23:26 GMT
தமிழகத்தில் லோக் ஆயுக்தா உறுப்பினர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.
சென்னை:

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்புக்கு நீதித்துறை சாராத உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ராஜாராம் மற்றும் கே.ஆறுமுகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான பணி நியமன ஆணையை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னையில் உள்ள ராஜ் பவனில் வைத்து எம்.ராஜாராம் மற்றும் கே.ஆறுமுகம் ஆகியோரிடம் நேற்று வழங்கினார்.

அப்போது கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ஆர்.ராஜகோபால், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசு செயலாளர் எஸ்.ஸ்வர்ணா ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News