செய்திகள்
விபத்து குறித்து அறிந்ததும் அங்கு குவிந்த ஊழியர்கள்

வடபழனி போக்குவரத்து பணிமனையில் பேருந்து மோதி சுவர் இடிந்த விபத்தில் 2 ஊழியர்கள் பலி

Published On 2019-07-28 02:39 GMT   |   Update On 2019-07-28 02:39 GMT
சென்னை வடபழனி போக்குவரத்து பணிமனையில் பேருந்து மோதியதில் சுவர் இடிந்து விழுந்து, பணிமனை ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
சென்னை:

சென்னை வடபழனியில் உள்ள போக்குவரத்து பணிமனை பேருந்துகளில் நேற்று நள்ளிரவு பராமரிப்பு பணி நடைபெற்றது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று பணிமனை சுவர் மீதி மோதியது.

இந்த விபத்தில் பணிமனை ஊழியர்கள் 2 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். சக ஊழியர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையடுத்து பணிமனையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதிப்பட்டனர்.
Tags:    

Similar News