செய்திகள்
மழையில் நனையும் வாகன ஓட்டிகள்

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

Published On 2019-07-23 12:05 GMT   |   Update On 2019-07-23 12:05 GMT
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை:

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அந்தந்தப் பகுதிகள் குளிர்ந்தன. பல்வேறு பகுதிகளில் மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில், சென்னையில் சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், தியாகராயநகர், கிண்டி, எழும்பூர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை மற்றும் மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News