செய்திகள்
போராட்டம்

செய்யாறு அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்

Published On 2019-07-23 11:09 GMT   |   Update On 2019-07-23 11:09 GMT
செய்யாறு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்யாறு:

செய்யாறு அருகே உள்ள வடதண்டலம் பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 2 வாரமாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து டேங்க் ஆப்ரேட்டரிடம் கேட்டபோது பைப்-லைன் உடைந்துள்ளது. மோட்டார் பழுதடைந்து உள்ளது என அலட்சியமாக பதில் கூறி வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை செய்யாறு- ஆரணி செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தி, செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது டேங்க் ஆப்ரேட்டர் முறையான பதில் அளிக்காமல் அலட்சியப்படுத்துகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என ஆவேசமாக பொதுமக்கள் கூறினர்.

இன்று மாலைக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News