செய்திகள்
இளம்பெண் மாயம்

மேட்டுப்பாளையம் கல்லூரி மாணவி மாயம்

Published On 2019-07-23 10:16 GMT   |   Update On 2019-07-23 10:16 GMT
மேட்டுப்பாளையம் கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் சேர்ந்தவர் பரமசிவம்(58). இவரது மனைவி கவுசல்யா. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இளைய மகள் யுவஸ்ரீ(20).இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு பி.இ. படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி கல்லூரிக்கு சென்று வருவதாகக் கூறி விட்டு சென்றவர் இதுநாள் வரை வீடு திரும்ப வில்லை. அக்கம் பக்கம் எங்கும் விசாரித்தும் தேடியும் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பரமசிவம் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் ஒன்று கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது. தனது மகள் மேட்டுப்பாளையம் ராஜீவ்காந்தி நகரில் உள்ள ஒரு வாலிபரை திருமணம் செய்து கொண்டதாகத்தெரிகிறது. வீட்டை விட்டுச்சென்ற போது 20 1/2 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை எடுத்துச்சென்று விட்டார். எனவே என்மகளை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News