செய்திகள்
கைது

சொத்து தகராறில் விவசாயிக்கு கத்திகுத்து - உறவினர் கைது

Published On 2019-07-22 09:55 GMT   |   Update On 2019-07-22 09:55 GMT
வில்லியனூர் அருகே சொத்து தகராறில் விவசாயியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய உறவினரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுர்:

வில்லியனூர் அருகே திருக்காஞ்சி ஆண்டியார்பாளையத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது48) விவசாயி. இவருக்கும் இவரது உறவினரான கரிக்கலாம் பாக்கத்தை சேர்ந்த ஏழுமலை (55) என்பவருக்கும் சொத்து பாகப்பிரிவினை செய்வதில் தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று குமரேசன் தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஏழுமலை சொத்து பாகப்பிரிவினை குறித்து குமரேசனிடம் தகராறு செய்தார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஏழுமலை மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குமரேசனை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் படுகாயம் அடைந்த குமரேசன் கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து மங்களம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குபதிவு செய்து ஏழுமலையை கைது செய்தார்.

Tags:    

Similar News