செய்திகள்
தற்கொலை

பொக்லைன் ஆபரேட்டர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2019-07-21 18:08 GMT   |   Update On 2019-07-21 18:08 GMT
பெரம்பலூர் அருகே பொக்லைன் ஆபரேட்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் பாஸ்கர்(வயது 20). பொக்லைன் ஆபரேட்டரான இவருக்கு சம்பவத்தன்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பாஸ்கர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து பாடாலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News