செய்திகள்
மாயம்

தேனி அருகே பஸ் உரிமையாளர் திடீர் மாயம்

Published On 2019-07-21 12:54 GMT   |   Update On 2019-07-21 12:54 GMT
தேனி அருகே பஸ் உரிமையாளர் திடீரென்று மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேனி:

தேனி அருகே உள்ள தென்கரையை அடுத்த லெட்சுமிபுரம் சாஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் சஞ்சை (வயது 30). இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. இவர் பெரியகுளத்தில் இருந்து குமுளி செல்லும் தனியார் பஸ்சை சொந்தமாக நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது பஸ்சை மதுரையைச் சேர்ந்த மற்றொரு பஸ் உரிமையாளர் விலைக்கு கேட்டாராம். அதற்கு சஞ்சை மறுத்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த சஞ்சையை திடீரென காணவில்லை. அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது பற்றி சஞ்சையின் தாய் சுஜாதா தென்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து சஞ்சை எங்கு சென்றார்? என்ன ஆனார்? அவரை யாரும் கடத்தி சென்றர்களா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News