செய்திகள்
முக ஸ்டாலின்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக தேர்வான டி.ராஜாவுக்கு முக ஸ்டாலின் வாழ்த்து

Published On 2019-07-21 12:48 GMT   |   Update On 2019-07-21 12:48 GMT
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக தேர்வான டி.ராஜாவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து பதவி வகித்து வந்த  சுதாகர் ரெட்டி உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் ராஜினாமா செய்தார்.

இதைதொடர்ந்து, டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து நடைபெற்றுவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு கூட்டத்தின்போது அக்கட்சிக்கு புதிய தேசிய பொதுச் செயலாளராக யாரை நியமிக்கலாம்? என விவாதிக்கப்பட்டது.

தற்போது பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராக இருக்கும் மூத்த தலைவரான டி.ராஜாவின் பெயர் இதற்காக ஒருமனதாக முன்மொழியப்பட்டது.

தமிழ்நாட்டை சேர்ந்த டி.ராஜா(70) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக தேர்வான டி.ராஜாவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- 

ஏழை எளிய மக்களின் உரிமைகளை காக்க துணிச்சலான போராட்ட குணத்திற்கு சொந்தக்காரரான அவர் அரசியல் சட்டத்தின் அம்சங்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நேரத்தில் பொதுச் செயலாளரானது வரவேற்கத்தக்கது. ஜனநாயகத்தின் அடித்தளத்தை யாரும் அசைத்திட முடியாதவாறு பாதுகாக்கும் பணியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். 

இவ்வாறு முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News