செய்திகள்
தற்கொலை

கள்ளக்காதலி கணவருடன் சென்றதால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-07-21 11:10 GMT   |   Update On 2019-07-21 11:10 GMT
கோவையில் கள்ளக்காதலி கணவருடன் சென்றதால் விரக்தி அடைந்த சமையல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசப்பட்டு பகுதியை சேர்ந்த வீரய்யன். இவரது மகன் யோகேஷ் (வயது 18) . இவர் கோவை சுக்ரவார்ப்பேட்டையில் வீடு வாடகைக்கு எடுத்து அங்குள்ள ஒரு ஓட்டலில் சமையல் வேலை பார்த்து வந்தார். யோகேசுக்கும், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் எற்பட்டது. அந்த பெண்ணுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தையுடன் அந்த பெண்ணை கோவைக்கு யோகேஷ் அழைத்து வந்தார். இங்கு அந்த பெண்ணுடன் 1 மாதம் குடும்பம் நடத்தினார்.

மனைவி, குழந்தை கோவையில் இருப்பதை அறிந்த பெண்ணின் கணவர் கோவை வந்து மனைவியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், மனைவி குழந்தையை அழைத்துக் கொண்டு ஊருக்கு சென்றுவிட்டார்.

இதில் விரக்தியடைந்த யோகேஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News