செய்திகள்
தற்கொலை

தஞ்சை அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

Published On 2019-07-21 10:59 GMT   |   Update On 2019-07-21 10:59 GMT
தஞ்சை அருகே வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே உள்ள நடுக்காவேரி அரசமரத்து தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள்(வயது 70). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக இவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் குணமாகவில்லை.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். சம்பவத்தன்று கலிய பெருமாள் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சை அடுத்த மேலத்திருப் பூந்துருத்தியை சேர்ந்தவர் விக்னேஸ் (30).இவர் வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென பின்புறமுள்ள கொட்டகைக்கு சென்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் திருவையாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News