செய்திகள்
கைது

மாமியாரை வெட்டி கொன்று மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Published On 2019-07-20 12:09 GMT   |   Update On 2019-07-20 12:09 GMT
மாமியாரை வெட்டிக் கொன்று மனைவிக்கும் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் பழைய அய்யலூரைச் சேர்ந்தவர் பத்மாவதி. அங்கன்வாடி பணியாளராக வேலை பார்த்து வந்தார். பணத் தகராறு காரணமாக இவருக்கும் மருமகன் சரவணக்குமார் (வயது 39) என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாமியார் பத்மாவதியை சரவணக்குமார் வெட்டிக் கொன்றார். கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளி வந்து தினசரி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

இந்நிலையில் சரவணக்குமாருக்கும், அவரது மனைவி மல்லிகாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. உனது அம்மாவை கொன்றதைப் போல உன்னையும் கொலை செய்து விடுவேன் என சரவணக்குமார் தொடர்ந்து மிரட்டி வந்தார். இது குறித்து மல்லிகா வடமதுரை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சரவணக்குமாரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News