செய்திகள்
தஞ்சையில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை
தஞ்சையில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாரியம்மன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 68). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் ஜெயராமன் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெயராமன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.