செய்திகள்
ஜிகே வாசன்

காமராஜர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் திருப்பூரில், நாளை ஜி.கே. வாசன் பேசுகிறார்

Published On 2019-07-20 10:52 GMT   |   Update On 2019-07-20 10:52 GMT
திருப்பூரில் நாளை காமராஜர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் ஜி.கே. வாசன் கலந்து கொண்டு பேசுகிறார்.

கோவை:

கோவை மாநகர் தெற்கு மாவட்ட தலைவர் வி.வி. வாசன், வடக்கு மாவட்ட தலைவர் ஜவகர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

த.மா.கா. சார்பில் நாளை (21-ந் தேதி) காமராஜரின் 117-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் திருப்பூர் டவுன்ஹாலில் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் கலந்து கொண்டு பேசுகிறார். மூத்த மாநில துணைத் தலைவர்கள் ஞானதேசிகன், கோவை தங்கம்,மாநில பொது செயலாளர் விடியல் சேகர், குனியமுத்தூர் ஆறுமுகம், ஈரோடு ஆறுமுகம் மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னாள் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில இளைஞர் அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், விவசாயி அணிமற்றும் சார்பு அமைப்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

கோவை மாவட்டத்தில் இருந்து 1000 பேர் கலந்து கொள்ள உள்ளார்கள். எனவே அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறோம். பொதுக்கூட்டத்திற்காக ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட தலைவர் ரவிக்குமார், மாநில பொது செயலாளர் மோகன் கார்த்திக் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News