செய்திகள்
கைது

ராயக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

Published On 2019-07-19 16:21 GMT   |   Update On 2019-07-19 16:21 GMT
ராயக்கோட்டை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடிய 5 பேரை கைது செய்தனர்.
ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அயர்னப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட நல்லராள பள்ளி பகுதியில் உள்ள கணேசன் என்பவர் வீட்டின் முன்பு உள்ள புளிய மரத்தடியில் பணம் வைத்து சூதாடியதாக ஜெய்சந்திரன் (வயது44), மஞ்சுநாதன் (35), நாராயணசாமி (27), திம்மராஜ் (25), பிரகாஷ் (30) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News