செய்திகள்
தருமபுரி-கிருஷ்ணகிரியில் பரவலாக மழை
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் பரவலாக மழை பெய்தது. இதனால் இரவு முழுவதும் கடும் குளிர் நிலவியது. இந்த குளிர்ச்சியால் பூமியில் வெப்பம் தணிந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் கருமேகங்கள் கூடியது. பின்னர் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் பரவலான மழை பெய்தது. இதனால் இரவு முழுவதும் கடும் குளிர் நிலவியது.
இந்த குளிர்ச்சியால் பூமியில் வெப்பம் தணிந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர். மேலும் நகரில் முக்கிய சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கிடந்தது.
தருமபுரி- 13 மி.மீட்டரும், பாலக்கோடு-18 மி.மீட்டரும், பென்னாகரம்-10மி.மீட்டரும், ஒகேனக்கல்-15.2 மி.மீட் டரும், பாப்பிரெட்டிப்பட்டி-27.6 மி.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாரூரில் 4.6 மி.மீட்டரும், பெணுகொண்டாபுரத்தில் 3.2 மி.மீட்டரும், நெடுங்கல்லில் 4.2 மி.மீட்டரும், போச்சம்பள்ளியில் 13.6 மி.மீட்டரும் மழை பதிவானி உள்ளது.