செய்திகள்
விபத்து

மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி கோவில் பூசாரி பலி

Published On 2019-07-19 13:54 GMT   |   Update On 2019-07-19 13:54 GMT
இண்டூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த கோவில் பூசாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் மூர்த்தி (வயது 28). திருமணமாகாத மூர்த்தி அதேபகுதியில் உள்ள காளியம்மன் கோவில் பூசாரியாக இருந்து வந்தார். 

இந்த நிலையில் சம்பவத்தன்று  மூர்த்தி தனது மோட்டார் சைக்கிளில்  காரிமங்கலம் அருகே சென்றார். அப்போது அந்த வழியாக ஆட்டோ ஒன்று எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.  பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு உடல்நிலை மோசமானதால் மீண்டும் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News