செய்திகள்
தமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறப்பு
தமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படத்தை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் பஙகேற்றனர்.
சென்னை:
தமிழக சட்டசபையில் மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியார் திருவுருவப் படம் சட்டப்பேரவை மண்டபத்தில் 19-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறந்து வைக்கப்படும் என சபாநாயகர் தனபால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படத்தை முதல்வர் பழனிசாமி இன்று மாலை திறந்து வைத்தார்.
இந்த விழாவில், சபாநாயகர் தனபால், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன் உள்பட பலர் பங்கேற்பறனர்.
முதல்வர் பழனிசாமி திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியார் உருவப்படத்திற்கு கீழ் ‘வீரம்... தீரம்... தியாகம்’ என எழுதப்பட்டுள்ளது.