செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

அருப்புக்கோட்டை, திருச்சுழியில் மின்சாரம் நிறுத்தம்

Published On 2019-07-18 17:28 GMT   |   Update On 2019-07-18 17:28 GMT
அருப்புக்கோட்டை பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற 20-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
அருப்புக்கோட்டை:

அருப்புக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற 20-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அருப்புக்கோட்டை நகர் பகுதிகள், பாலையம்பட்டி, கல்குறிச்சி, ஆத்திப்பட்டி, பந்தல்குடி, பெரியபுளியம் பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

இதேபோல் தமிழ்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 20-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தமிழ்பாடி, இலுப்பையூர், திருச்சுழி, பனையூர், ஆனைகுளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின்தடை ஏற்படும்.

இந்த தகவலை அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் முத்தரசு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News