செய்திகள்
சோழவரம் அருகே இலவச லேப்-டாப் கேட்டு மாணவர்கள் மறியல்
சோழவரம் அருகே இலவச லேப்-டாப் வழங்கக்கோரி சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்குன்றம்:
பாடியநல்லூரில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 13-ந்தேதி நடந்த நிகழ்ச்சியின்போது 15 அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்-டாப்களை அமைச்சர் வழங்கினார்.
அப்போது 2016-17 மற்றும் 2017-18 ஆண்டுகளில் படித்த மாணவ- மாணவிகளுக்கு லேப்-டாப் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் அலமாதி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் லேப்டாப் வழங்கக்கோரி திடீரென பள்ளி முன் செங்குன்றம்- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த லாரியின் கண்ணாடியை கல்வீசி உடைத்தனர்.
தகவல் அறிந்ததும் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.
பாடியநல்லூரில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 13-ந்தேதி நடந்த நிகழ்ச்சியின்போது 15 அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்-டாப்களை அமைச்சர் வழங்கினார்.
அப்போது 2016-17 மற்றும் 2017-18 ஆண்டுகளில் படித்த மாணவ- மாணவிகளுக்கு லேப்-டாப் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் அலமாதி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் லேப்டாப் வழங்கக்கோரி திடீரென பள்ளி முன் செங்குன்றம்- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த லாரியின் கண்ணாடியை கல்வீசி உடைத்தனர்.
தகவல் அறிந்ததும் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.