செய்திகள்
அத்திவரதர்

அத்திவரதர் தரிசனத்துக்காக செங்கல்பட்டு-கடற்கரை இடையே சிறப்பு ரெயில்

Published On 2019-07-18 03:12 GMT   |   Update On 2019-07-18 03:12 GMT
அத்திவரதர் தரிசனத்துக்காக செங்கல்பட்டு-கடற்கரை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் சிறப்பு தரிசனத்திற்கு செல்பவர்களுக்காக, கீழ்க்கண்ட சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது.

செங்கல்பட்டு-காஞ்சிபுரம் இடையே மாலை 5.30 மணி, காஞ்சிபுரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 7.45 மணிக்கு இயக்கப்பட்ட சிறப்பு மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக செங்கல்பட்டு-கடற்கரை இடையே சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு மின்சார ரெயில் செங்கல்பட்டில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு இரவு 7 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடையும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News