செய்திகள்
தற்கொலை (கோப்பு படம்)

கோவையில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2019-07-17 11:22 GMT   |   Update On 2019-07-17 11:22 GMT
கோவையில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

பெங்களூருவை சேர்ந்தவர் கக்கன்ராஜ் (வயது 21). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி அருகே உள்ள ரமணி மயூரி பகுதியில் வீடு எடுத்து தனியாக தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இந்தநிலையில் இன்று காலை இவரது வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த காவலாளி அங்கு சென்று ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது அறையில் கக்கன்ராஜ் பிணமாக தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News