செய்திகள்
கைது

பொள்ளாச்சியில் நர்சிங் மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி- வாலிபர் கைது

Published On 2019-07-17 05:12 GMT   |   Update On 2019-07-17 05:12 GMT
பொள்ளாச்சியில் நர்சிங் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் போக்சா சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலி புதூரை சேர்ந்தவர் காளிதாஸ் (25) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

இந்த நிலையில் காளிதாஸ் அதே பகுதியை சேர்ந்த உடுமலையில் உள்ள நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. மாணவி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

இதனால் காளிதாஸ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. பின்னர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசிற்கு மாற்றப்பட்டது.

மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து காளிதாசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பொள்ளாச்சியில் பாலியல பலாத்கார சம்பவம் அதிகரித்து வருவது பொதுமக்களிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News