செய்திகள்
புளியந்தோப்பில் அரிவாளுடன் 5 ரவுடிகள் கைது
புளியந்தோப்பில் அரிவாளுடன் 5 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பூர்:
புளியந்தோப்பு பி.வி.காலனி பகுதியில் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக கும்பலாக நின்ற 5 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் புளியந்தோப்பை சேர்ந்த குள்ள பிரகாஷ், சந்துரு, சதீஷ், அருண், பிரேம் என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து 6 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு நண்பர் பிறந்த நாள் விழாவில் புளியந்தோப்பை சேர்ந்த விக்னேஷ் என்பவர் பிரகாஷ் உள்ளிட்ட அவரது கூட்டாளிகளை தாக்கியதாக தெரிகிறது.
இதற்கு பழிவாங்க விக்னேசை தீர்த்து கட்டுவதற்காக பிரகாஷ் தரப்பினர் அரிவாளுடன் சுற்றி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.
விக்னேஷ் மீது கடந்த 2018-ம் ஆண்டு போலீசை கத்தியால் வெட்டிய வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.