செய்திகள்
டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை

கடன் பிரச்சினை - டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை

Published On 2019-07-13 18:00 GMT   |   Update On 2019-07-13 18:00 GMT
சிவகாசி அருகே கடன் பிரச்சினை காரணமாக டிராவல்ஸ் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி:

சிவகாசி காமராஜர் ரோட்டை சேர்ந்தவர் செண்பக தங்கநாயகம்(வயது 38). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிலையில் இவர் நண்பர்கள் சிலரிடம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News