செய்திகள்
தற்கொலை

துடியலூர் அருகே வடமாநில வாலிபர் தற்கொலை

Published On 2019-07-13 12:08 GMT   |   Update On 2019-07-13 12:08 GMT
துடியலூர் அருகே வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார் ஜனா (வயது 20). இவர் கோவை துடியலூர் அருகே உள்ள வட்டமலைபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்வத்தன்று இரவு இவர் தனது செல்போனில் குடும்பத்தினரிடம் நீண்ட நேரமாக பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது குடும்பத்தினருக்கும் மனோஜ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த அவர் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த சக ஊழியர்கள் இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட மனோஜ்குமாரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News