செய்திகள்
மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூலை 15ல் நடைபெறும் - அன்பழகன் அறிவிப்பு
தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
சென்னை:
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. தேனாம்பேட்டையில் உள்ள அன்பகம் - அண்ணா மன்றத்தில் மாலை 5 மணி அளவில் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல், பிரசார யுக்தி உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.