செய்திகள்
ப்திய எம்.பி.க்களுடன் முதல்வர் பழனிசாமி

தேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

Published On 2019-07-11 11:14 GMT   |   Update On 2019-07-11 11:14 GMT
தமிழகத்தில் அ.தி.மு.க. சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களான முகமது ஜான், சந்திரசேகர் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முதல்வர் பழனிசாமியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சென்னை:

அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட முகமது ஜான், சந்திரசேகர் மற்றும் கூட்டணி கட்சியான பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
 
இதற்கிடையே, வேட்புமனு தாக்கல் செய்த 3 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என சட்டப் பேரவை செயலர் சீனிவாசன் தெரிவித்தார். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு சான்றிதழை வழங்கினார்.



இந்நிலையில், அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை தேர்தலில் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான், சந்திரசேகர் மற்றும் கூட்டணி கட்சியான பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்தனர். அப்பொழுது தங்களுக்கு அளிக்கப்பட்ட சான்றிதழை  காட்டி அவரிடம் வாழ்த்து பெற்றனர்.
Tags:    

Similar News