செய்திகள்
காதல் ஜோடி

வடமதுரை போலீசில் காதலனுடன் தஞ்சமடைந்த நர்சிங் மாணவி

Published On 2019-07-11 10:35 GMT   |   Update On 2019-07-11 10:35 GMT
வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு நர்சிங் மாணவி காதலனுடன் தஞ்சமடைந்தார்.

வடமதுரை:

வடமதுரை அருகே தீத்தா கிழவனூரைச் சேர்ந்தவர் சங்கீதா (வயது 19). நர்சிங் கல்லூரி மாணவி. கல்பட்டிசத்திரம் சீத்தப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 20) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்துள்ளனர்.

இவர்கள் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவரவே எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அச்சமடைந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். போலீசார் காதல் ஜோடியின் பெற்றோர்களை அழைத்து சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.

அய்யலூர் அருகே குரும்பபட்டியைச் சேர்ந்த சரவணன் (25) பைனான்சியர். இவருக்கும் கருவார் பட்டியைச் சேர்ந்த பிரியா (22) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. வீட்டில் எதிர்ப்பு கிளம்பவே காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பு கேட்டு திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் தஞ்சமடைந்தனர்.

அவரது உத்தரவுபடி வடமதுரை போலீசார் காதல் ஜோடியின் பெற்றோர்களை அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News