செய்திகள்
வரதட்சணை கொடுமை

மதுரை திருநகரில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை

Published On 2019-07-11 10:29 GMT   |   Update On 2019-07-11 10:29 GMT
மதுரை திருநகரில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை:

மதுரை திருநகர் ஜோசப் நகரை சேர்ந்தவர் பிரதீபா (வயது 35). இவருக்கும் பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த ஆனந்த்ராஜ் (38) என்பவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனந்தராஜ் ஏற்கனவே திருமணமானவர்.

இந்த நிலையில் பிரதீபா திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் ஆனந்த்ராஜ் துன்புறுத்தி வருகிறார். இதற்கு அவரது தாய் கலைச்செல்வி (70), சகோதரி மஞ்சுளா ஆகியோர் உடந்தையாக உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ஆனந்த் ராஜ், அவரது தாய், சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Tags:    

Similar News