செய்திகள்
சரக்கு வேன் கார் மீது மோதி விபத்து

திருவண்ணாமலை அருகே சரக்கு வேன்-கார் மோதல் - புரோகிதர் பலி

Published On 2019-07-10 18:03 GMT   |   Update On 2019-07-10 18:03 GMT
திருவண்ணாமலை அருகே சரக்கு வேன் கார் மீது மோதிய விபத்தில் புரோகிதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை பே கோபுரம் மெயின் ரோடு ஓம் சக்தி இல்லம் பகுதியை சேர்ந்தவர் திபுசண்முகம், புரோகிதர். இவரது மனைவி சுஜாதா. இவர்களுடைய மகன் சந்திரமவுனேஸ்வரன் (2). திபுசண்முகம் குடும்பத்துடன் காஞ்சீபுரம் அத்திவரதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய காரில் சென்றனர்.

போளூர் ரோடு திடீர் குப்பம் அருகில் செல்லும் போது வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த சரக்கு வேன் திடீரென கார் மீது மோதியது. இதில் திபுசண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் வந்த சுஜாதா, சந்திரமவுனேஸ்வரன் மற்றும் சரக்கு வேனில் வந்த வேலூர் கஸ்பாவை சேர்ந்த ஜலில்கான் (33), வேலூர் தொரப்பாடியை சேர்ந்த டிரைவர் சிவா (29) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News