செய்திகள்
சங்கரன்கோவிலில் பெண்ணிடம் 5 பவுன் செயின் அபேஸ்
சங்கரன்கோவிலில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் செயினை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் முத்தையா(வயது 55). டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கலா (50). இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் கலா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை அபேஸ் செய்துவிட்டு தப்பி சென்றார்.
அதிகாலை கண்விழித்து பார்த்தபோதுதான் கழுத்தில் இருந்த செயின் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசில் முத்தையா புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.