திருமங்கலத்தில் காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
பேரையூர்:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள குராயூரைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மகன் முத்துராஜ் (வயது 25) என்ஜினீயர்.
இவர் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியில் படித்த போது அதே கல்லூரியில் படித்த அருப்புக்கோட்டை நிரஞ்சனவுடன் (24) பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் 3 ஆண்டுகளாக காதலித்துள்ளனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் காதல் ஜோடி இதனை ஏற்கவில்லை.
இந்த நிலையில் 3-ம் ஆண்டு படித்து வந்த நிரஞ்சனா, வீட்டை விட்டு வெளியேறி காதலரை திருமணம் செய்தார்.
தொடர்ந்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தது. போலீசார் இருவரின் பெற்றோரையும் அழைத்து பேசினர். மேஜர் பெண்ணான நிரஞ்சனா, கணவருடன் செல்ல விரும்புவதாக கூறியதால் அவரை முத்துராஜூடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.