செய்திகள்
தற்கொலை

தேவதானப்பட்டி அருகே என்ஜினீயர் தற்கொலை

Published On 2019-07-09 10:04 GMT   |   Update On 2019-07-09 10:13 GMT
தேவதானப்பட்டி அருகே ரசாயணம் குடித்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

தேனி:

தேவதானப்பட்டி அருகே உள்ள புல்லக்காபட்டி டி.வி.நகரை சேர்ந்தவர் மணியன் (வயது25). என்ஜினீயரான இவர் வேலை எதுவும் இல்லாததால் பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் தனியாக தொழில் நடத்த தந்தையிடம் பணம் கேட்டார். அதற்கு அவரது தந்தை மறுத்ததாக தெரிகிறது.

இதனால் மனவேதனை அடைந்த மணியன் பெயிண்டில் சேர்க்ககூடிய ரசாயணத்தை குடித்து விட்டார். ஆபத்தான நிலையில் அவரை பெரிய குளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்பு அவர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிரசிகிச்சை அளித்தும் பலனின்றி மணியன் பரிதாபமாக இறந்தார். இது பற்றி தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேவதானப்பட்டி அருகே உள்ள ஏ.புதூரை சேர்ந்தவர் அசோக் (வயது27). குடும்ப பிரச்சினை காரணமாக இவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அசோக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அசோக் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News