செய்திகள்
கைது

மத்தூர் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது

Published On 2019-07-08 16:28 GMT   |   Update On 2019-07-08 16:28 GMT
மத்தூர் அருகேயுள்ள ஆம்பள்ளி ஆற்றில் அரசு அனுமதியின்றி மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள ஆம்பள்ளி ஆற்றில் அரசு அனுமதியின்றி மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அனுமதியின்றி ஆற்றில் 2 யூனிட் மணல் கடத்தியதாக டிப்பர் லாரி மற்றும் உரிமையாளர் சேக்கினாம் பட்டி பகுதியை சேர்ந்த குமார் (வயது38), அதேபோல் லாரி டிரைவர் குண்டேப்பள்ளி பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன் கார்த்திக் (21) ஆகிய 2 பேரையும் மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி கைது செய்தார். 

பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரையும் போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.  
Tags:    

Similar News