செய்திகள்
தற்கொலை

குன்றத்தூர் அருகே காதலன் வீட்டில் பெண் தற்கொலை

Published On 2019-07-08 08:49 GMT   |   Update On 2019-07-08 08:49 GMT
குன்றத்தூர் அருகே காதலன் வீட்டில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூந்தமல்லி:

குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம் தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் சீதா (வயது 18). இவரும் கெலட்டி பேட்டையை சேர்ந்த அரி கிருஷ்ணணும் காதலித்து வந்தனர். கடந்த 2 மாதமாக சீதா காதலன் வீட்டில் தங்கி இருந்தார். இந்தநிலையில் நேற்று இரவு காதலன் வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அரிகிருஷ்ணன் உடைந்த பாட்டிலால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சீதா சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் போலீ சில் புகார் செய்து உள்ளனர்.

Tags:    

Similar News