செய்திகள்
அமைச்ச்ர் செங்கோட்டையன்

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலணிக்கு பதில் ஷூ வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2019-07-07 08:33 GMT   |   Update On 2019-07-07 08:33 GMT
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலணிகளுக்கு பதிலாக இனி ஷூ வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச காலணிகளுக்கு பதிலாக இனி ஷூ வழங்கப்படும். நடப்பு கல்வியாண்டில் வழங்குவதற்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

நடப்பு கல்வியாண்டில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் 10 லட்சத்து 40 ஆயிரம் மாணவா்களுக்கு இம்மாத இறுதிக்குள் மடிக்கணினிகள் வழங்கப்படும். 2017 - 2018-ம் ஆண்டு 12-ம் வகுப்பு படித்த மாணவா்களுக்கு 3 மாத காலத்தில் மடிக்கணினி வழங்கப்படும்.

மாணவர்களுக்கு யூ டியூப் பாடத்திட்டம் அடுத்த மாதம் உருவாக்கப்படும். வகுப்பறையில் நடத்தப்படும் பாடங்கள் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News