செய்திகள்
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் - முதலமைச்சர் பழனிசாமி பேட்டி
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் முடிவை தடுக்க அனைவரும் ஒன்றாக இணைந்து அழுத்தம் கொடுப்போம். பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். பிரிந்து சென்றவர்கள் தாய் கழகத்தில் இணைய வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறியிருந்தார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் அனைவரும் தாய் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.