செய்திகள்
திருமணம் செய்வதாக கூறி காதலியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு
திருமணம் செய்வதாக கூறி காதலியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
மேலூரையடுத்த பனங்காடியைச் சேர்ந்த செல்வம் மகள் பாண்டிச்செல்வி (வயது 19). இவர் அதே பகுதியில் வசிக்கும் அழகு என்பவரின் மகன் கார்த் திக்கை காதலித்து வந்தார்.
இந்த நிலையில் கார்த்திக் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாண்டி செல்வியுடன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதில் பாண்டி செல்வி கர்ப்பமானார். ஆனால் கார்த்திக் திருமணம் செய்ய மறுத்து விட்டார்.
எனவே பாண்டிசெல்வி இது தொடர்பாக மேலூர் அனைத்து மகளிர் போலீசில் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நிர் மலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.