செய்திகள்
முதல்வர் பழனிசாமி

நாடு வளர்ச்சிபெற உகந்த தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் - முதல்வர் பழனிசாமி

Published On 2019-07-05 11:24 GMT   |   Update On 2019-07-05 13:36 GMT
நாடு மேலும் வளர்ச்சி பெறுவதற்கு உகந்த தொலைநோக்கு பார்வை கொண்டது மத்திய பட்ஜெட் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை:

பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார். 

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறீயுள்ளதாவது:

அனைத்துத் துறைகளிலும் நாடு மேலும் வளர்ச்சி பெற உகந்த தொலைநோக்கு பார்வை கொண்டது பட்ஜெட். முன்னேற்றத்திற்கான கொள்கைகள், திட்டங்களோடு தாக்கல் செய்த பட்ஜெட்டை வரவேற்கிறேன்.



பிசிராந்தையார் பாடிய புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி தமிழுக்கு பெருமை சேர்த்தமைக்கு நன்றி.

பல்வேறு வேளாண் திட்டங்களுக்கு கணிசமான நிதி ஒதுக்க வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்டப் பணிகளுக்கான ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும்.

கோவை, மதுரை மாநகராட்சியில் புதிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். சென்னை புறநகர் ரெயில்வே சேவைகளை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News