செய்திகள்
கைது (கோப்பு படம்)

எழும்பூரில் போலீஸ்காரரை தாக்கிய கல்லூரி மாணவர் கைது

Published On 2019-07-04 10:04 GMT   |   Update On 2019-07-04 10:04 GMT
எழும்பூரில் வாகன சோதனையின் போது போலீஸ்காரரை தாக்கிய கல்லூரி மாணவரை கைது செய்த போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை:

எழும்பூர் எல்.ஜி. சாலையில் ஏட்டு நாராயணன், போலீஸ்காரர் தயாநிதி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் போலீஸ் காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போலீஸ்காரர் தயாநிதியையும் தாக்கினர். இதுபற்றி எழும்பூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

விசாணையில் அவர்கள் இருவரும் விருகம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ராம்குமார், அவரது நண்பர் கார் மெக்கானிக் விக்னேஷ் என்பது தெரிந்தது.

அவர்கள் மீது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது, ஆபாசமாக பேசியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News