செய்திகள்
கிருஷ்ணகிரியில் 11-ம் வகுப்பு மாணவி கடத்தல்
கிருஷ்ணகிரியில் 11-ம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி, நரசிம்மசுவாமி கோவில்தெருப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 26ம் தேதி இரவு உணவருந்திவிட்டு வீட்டில் தூங்க சென்ற சிறுமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தி சிறுமியின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் அந்த மாணவி கிடைக்காததால், கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகாரளித்தனர்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மாணவியை, அதேப் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் தினேஷ்(20), என்பவர் காதலித்து வந்ததாகவும், அந்த சிறுமியை திருமணம் செய்வதற்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இது குறித்து தினேஷ் மீது சிறுமி கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.