செய்திகள்
கொரடாச்சேரி அருகே கல்லூரி மாணவி மாயம்
கொரடாச்சேரி அருகே கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
கொரடாச்சேரியை அடுத்த கண்கொடுத்த வனிதம் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவரது மகள் சுசி (வயது 21). கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 29-ந் தேதி கல்லூரி செல்வதாக கூறி சென்ற சுசி மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.
இதுபற்றி ஜீவானந்தம் கொரடாச்சேரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்.