செய்திகள்

திருச்சியில் மாணவி உள்பட 2 பேர் மாயம்

Published On 2019-06-27 14:49 GMT   |   Update On 2019-06-27 14:49 GMT
திருச்சியில் மாணவி உள்பட 2 பேர் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் 2 பேரை தேடி வருகிறார்கள்.
திருச்சி:

திருச்சி பீமநகர் மார்சிங் பேட்டையை சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகள் பிரியங்கா (17). இவர் வீட்டில் இருந்தபடி 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 25-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பிரியங்கா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. நல்லதம்பி பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பிரியங்கா காதல் பிரச்சினையில் வீட்டை விட்டு சென்றாரா? அல்லது வேறு காரணமா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சேலம் மாவட்டம் சாரங்கபட்டி மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி மகேஸ்வரி (59). இவர்கள் 2 பேரும் கடந்த 1 வாரத்திற்கு முன்பு சாமி கும்பிட ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவிலை சுற்றி பார்த்தனர். அப்போது திடீரென சேகரை காணவில்லை. மகேஸ்வரி பல இடங்களில் தேடியும் சேகரை கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சேகரை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News